இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2020 வெளியீடுகள் > மறுபிறவிக் கொள்கை
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

மறுபிறவிக் கொள்கை

மறுபிறவிக் கொள்கையும் சித்தர் நெறியும்
  1. ஒவ்வொரு மனிதனுக்கும் முற்பிறவிகள், மறுபிறவிகள் உண்டு என்பதையும்; முற்பிறவிகளை உணரலாம், மறுபிறவிகளை அறியலாம் என்பதையும் சித்தர் நெறி ஒன்றுதான் தெளிவாக விளக்குகின்றது. அப்படி முற்பிறவிகளை உணர்வதால் ஏற்படக் கூடிய குழப்பங்களை விளக்கி, அவற்றை எப்படி தவிர்த்துக் கொள்ளமுடியும் என்பதைக் கூறும் அஞ்சல் கட்டுரை இந்த இதழில் முதலாவதாக உள்ளது.
  2. ஒன்பது கோள்களின் வழிபாடு பற்றி பதினெண்சித்தர்களுடைய மெய்யான இந்துமதம் கூறுவதை ஒரு அட்டவணையிலும், மற்றொரு அட்டவணையில் பொய்யான ஹிந்துமதத்தில் வழங்கப்படும் ஒன்பது கோள்கள் பற்றிய தவறான கருத்துக்களையும் வழங்கி விளக்கும் கட்டுரை இரண்டாவதாக உள்ளது.
  3. அடுத்துள்ள நான்கு (4) கட்டுரைகளும் அடியான்களுக்கென வழங்கிய கருத்து விளக்க அஞ்சல்கள்.

 

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

PDF வடிவில் படித்திட .....--->>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |