அண்மையில் பதிவேற்றம் செய்யப்பட்டவை:-
மாத வெளியீடுகள்
குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் எழுதிய இந்து வேதச் சிந்தனைகள், இந்து வேதச் சாரங்கள், இந்து வேதக் கருத்துக்கள், ... முதலியவற்றிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மாதா மாதம் சிறிய நூல் வடிவில் வெளியிடுகின்றோம். அந்த வெளியீடுகளை இந்த வலைத்தளத்தில் அனைவரும் படித்துப் பயன்பெறும் விதத்தில் பாதுகாக்கின்றோம்.
இவற்றினை நேரடியாக இங்கேயே படித்துப் பயன்பெறலாம். அல்லது PDF கோப்புக்களாக பதிவிறக்கம் (Download) செய்து அச்சிட்டோ; அல்லது உங்களின் Smart Phone அல்லது கணிணியிலோ படித்துப் பயன்பெறலாம். ஆர்வம் உள்ள தமிழர்களுக்கு படிக்கக் கொடுங்கள்; இந்த வலைத்தள முகவரியை அவர்களுக்கு அறிமுகப் படுத்திடுங்கள்.
தமிழர்களின் மதமான மெய்யான இந்து மதம்தான் உலக மதங்கள் அனைத்திற்கும் தாய் என்பதை அனைத்துத் தமிழர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பதினெண்சித்தர்கள் அருளூறு அமுதத் தமிழ் மொழியில் படைத்த மெய்யான இந்து மதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துவதே நமது நோக்கம்.
2017இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.
2016இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.
2015இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.
2014இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.
2013இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.