இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2020 வெளியீடுகள் > குருவழிப் பயிற்சி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

குருவழிப் பயிற்சி

குருவழிப் பயிற்சி முயற்சி
  1. "குருவழியாகப் பயிற்சி முயற்சிகளைச் செய்பவர்கள் அவரவர் தரத்திற்கும், திரத்திற்கும், வீரத்திற்கும், தீரத்திற்கும் ஏற்ப அகல்விளக்காகவோ, குத்துவிளக்காகவோ, சரவிளக்காகவோ, கைத் தீப்பந்தமாகவோ, கோபுரத்து விளக்காகவோ, தெருவிளக்காகவோ, கலங்கரை விளக்கமாகவோ செயல்படலாம்." - என்ற குரு வாசகத்தினை வழங்கி குருதேவர் எழுதிய அஞ்சல் கட்டுரை முதலாவதாக உள்ளது.
  2. வேலூர் நகரில் குருதேவர் அருள்வழங்கியும், பிறமஞான சபையிலும் ஆசிரியர் இல்லத்திலும் அருளுரை வழங்கியும் செயல்பட்ட போது வழங்கிய கொள்கை விளக்க அறிக்கை அடுத்ததாக உள்ளது.
  3. பதினெண்சித்தர் பீட அறக்கட்டளை ஒன்றினை வேலூரில் உள்ள அம்மணாங்குட்டை மடத்தில் நிறுவுவதற்காக குருதேவர் எழுதிய அறிவிப்பு. இந்த அறக்கட்டளை செய்யும் பணிகளையும் குருதேவர் இதில் வழங்கி உள்ளார்.
  4. சலவைத் தொழிலாளர்களும், முடிவெட்டும் மருத்துவர்களும்தான் அரியணையில் இருப்பவர்களின் கண்களாகவும், வேளிர்களின் கைகளாகவும் குருபாரம்பரியம் போற்றுகின்றது என்பதை விளக்கி குருதேவர் எழுதிய அஞ்சல் நான்காவதாக உள்ளது.
  5. காலடி ஆதிசங்கரர் தமிழினத்தில்தான் தோன்றினார் என்பதை கருவூர்த் தேவர் அவர்களின் குருபாரம்பரிய வாசகங்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட கட்டுரை அடுத்து உள்ளது.
  6. தெய்வீக மருத்துவம் இன்று தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் ஓரளவாவது பரவி இருக்கின்ற நிலை உயர்திரு எம்.என்.இராய் அவர்களின் முயற்சியால் விளைந்ததே என்பதை விளக்கி குருதேவர் எழுதிய நெடிய கட்டுரை இறுதியாக உள்ளது.
  7. தனிமனித வளர்ச்சியே நாட்டு வளர்ச்சியாக இருக்கும் என்பதை விளக்கும் வாசகங்கள் இறுதிப் பக்கத்தில் உள்ளன.

கட்டுரைகளை நேரடியாகப் ப்டித்திட --->>>

இந்த வெளியீட்டினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும்.>>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |