இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2020 வெளியீடுகள் > பூசைமொழிகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

பூசைமொழிகள்

பதினெண்சித்தர் பூசைமொழிகள்

 இந்த இதழில் உள்ள கட்டுரைகள் 1986இல் குருதேவர் அவர்கள் அச்சிட்ட கையடக்க பூசைமொழி புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. பூசைமொழிகளைத் தவிர்த்து கட்டுரைகள் மட்டுமே இங்கே வழங்கப் பட்டிருக்கின்றன.

  1. அட்டைப்பட அறிமுகம். - குருதேவர் இந்துமதத் தந்தையாக அரசயோகியாக பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் தோன்றியுள்ளவர் என்பதை விளக்கி அவரை அறிமுகம் செய்து அ.வி.தி. செயலாளர் பரமாச்சாரியார் வழங்கும் கட்டுரை.
  2. பதிப்புரை -பூசாமொழிகள் என்ற இந்தப் புத்தகத்திற்கான பதிப்புரை.
  3. முன்னுரை - குருதேவர் அவர்கள் இந்தப் பூசாமொழிகளை வழங்கிடுவதற்கான காரணங்களை விளக்கும் முன்னுரை.
  4. அறிமுகவுரை - இயக்கப் பொறுப்பாளர் பிறமாச்சாரியார் அவர்கள் இந்தப் பூசாமொழிகள் புத்தகத்திற்கு எழுதிய அறிமுகவுரை.
  5. பின்னுரை - குருதேவர் அவர்கள் வழங்கிய பூசாமொழிகள் எத்தகையது என்பதை விளக்கும் பின்னுரை.
  6. இந்து மறுமலர்ச்சி இயக்க முழக்கங்கள் - உலகம் முழுவதிலும் உள்ள அருளாளர்கள், மதத் தலைவர்கள், மத வாழ்வு வாழும் பெரியோர்கள் .... முதலிய அனைவருக்கும் இயக்கம் விடுக்கும் முழக்கங்கள்.
  7. தெய்வீக மருத்துவம் - ஒரு மடல்! - 1969இல் மருத்துவ மாத இதழ் ஒன்றில் குருதேவர் வெளியிட்ட சித்த மருத்துவம் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
PDF வடிவில் முழுமையாகப் படித்திட ...>>>
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |