18.10.1986இல் அப்போதைய வட ஆற்காடு மாவட்ட வேலூரில் குருதேவர் அவர்களின் சுற்றுப் பயணத்தின் போது மகாபாரதப் போரின் நாயகர்களுள் ஆச்சாரிய பீடமாக இருந்திட்ட துரோணாச்சாரியார் அவர்கள் எழுந்தருளி குருதேவரிடம் மீண்டும் ஒரு குருதி சிந்தும் மகாபாரதப் போரையே இப்போதைய காலகட்டத்திற்குப் பரிந்துரைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது குருதேவர் அவர்கள் பதினெண்சித்தர் பீடாதிபதியாக இருந்து 'முன்னோர் வழிபாடே இந்துமதம்' என்பதற்கேற்ப அந்தப் பரிந்துரையை ஏற்று அதனையே வேலூரில் நிகழ்ந்த இருவேறு பூசைகளின் போது அறிவித்துப் பூசையை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சியை குருதேவர் அவர்கள் காரண காரியங்களுடன் விவரித்து எழுதிய கட்டுரையே இந்த மாத இதழில் உள்ளது.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
இந்தக் கட்டுரையை PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்...>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.