இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2020 வெளியீடுகள் > இந்துமத நிறுவனங்கள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இந்துமத நிறுவனங்கள்

இந்துமத நிறுவனங்களைத் தோற்றுவித்திட...

 இந்துமதத்திற்கென வழிபாட்டு நிலையங்கள்தான் இருக்கின்றனவே தவிர, இந்துமதத்தை தத்துவம், செயல்சித்தாந்தம், உண்மையான மத வரலாறு ... போன்றவற்றின் அடிப்படைகளைக் காத்து வளர்த்திடும் நிறுவனங்கள் இல்லவே இல்லை. அத்தகைய நிறுவனங்களை எப்படி உருவாக்கிடுவது என்பது பற்றிய கட்டுரை முதலாவதாக இந்த மாத வெளியீட்டில் உள்ளது.

 அடுத்ததாக திருமந்திற ஓலைநாயகத்தின் அறிவிப்பு ஆணைகளாக 18 பத்திகள் 1986ஆம் ஆண்டில் இயக்கத்தின் வளர்ச்சிக்குரிய ஆணைகளாக குருதேவரிடம் பெற்று சித்தர்மாநகர் குருகுலத்திலிருந்து எழுதப்பட்ட கட்டுரை உள்ளது. இந்த ஆணைகளில் பெரும்பாலானவை இந்தக் காலக்கட்டத்திற்கும் பொருந்தும் என்பதை படிக்கும் போது உணரலாம்.

 மூன்றாவதாக முசிறிச் சித்தரடியார் ஒருவரின் ஊக்க உரைகள் கடிதமாக அவரின் கையெழுத்திலேயே கிடைத்தது. அவை, குருதேவரே அவருக்குள் இருந்து அவரை எழுதச் செய்தது போல் இருப்பதைக் காணலாம்.

 அடுத்த இரு கட்டுரைகள் சித்தர்மாநகர் பொறுப்பாளராக இருக்கும் அருள்மிகு வீரமாகாளி சன்னிதானம் அவர்களுக்கு குருதேவர் எழுதிய விளக்க அஞ்சல்களே.  இவற்றில், சில மாணாக்கர்கள் இயக்கத்தைக் குறைகூறி விலகுவதன் தொடர்பாக குருதேவர் அளிக்கும் வழிகாட்டல்களாக இருப்பினும்; அவற்றை எந்த விதத்தில் அணுகுவது என்பது பற்றி விரிவான விளக்கங்களை குருதேவர் வழங்குகின்றார்.

 இறுதியாக உள்ள கட்டுரையில் அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைச் செயலாக்குபவர்கள் எப்படி எப்படி எல்லாம் மக்களிடையில் செயல் பட வேண்டும் என்பதை விளக்குகின்றார் குருதேவர். இந்தக் கட்டுரை முழுமையாகக் கிடைக்கவில்லை.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

விரிவாக PDF வடிவில் இங்கே படிக்கவும் --->>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |