இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2020 வெளியீடுகள் > மீண்டும் பாரதப் போர்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

மீண்டும் பாரதப் போர்

மீண்டும் ஒரு பாரதப் போர் - முன்னுரை
  1. அப்போதைய வட ஆற்காடு மாவட்ட வேலூரில் 43,73,087இல் ஐப்பசித் திங்கள் முதல் நாளன்று குருதேவர் அவர்களின் சுற்றுப் பயணத்தின் போது நிகழ்ந்த அருளுலக நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட "மீண்டும் ஒரு பாரதப் போர்" என்ற கட்டுரையின் முன்னுரையே இந்த இதழில் முதலாவதாக உள்ள இந்தக் கட்டுரை.
  2. நாம் எப்படி அமைதியாக அருட்பணி விரிவாக்கத் திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டும் என்பதை குருதேவர் ஒரு அஞ்சலின் வாயிலாக விவரித்த அஞ்சல் அடுத்ததாக உள்ளது.
  3. வட ஆற்காடு மாவட்டச் சுற்றுப் பயணத்தின் போது சந்திர கிரகணப் பூசையை எப்படிச் செய்வது என்று விவரித்த அஞ்சல் கட்டுரை அடுத்து உள்ளது.
  4. நாள்கோள் மீன் பாதிப்பை சித்தர் நெறிப் பூசைகளால் முழுமையாகத் தடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு குருதேவர் அவர்களின் தலைமைப்பீட அடியான் அளித்த பதில் அஞ்சல்.
  5. மதுரைச் சுற்றுப்பயணத்தின் போது செயல்பட வேண்டிய விதத்தையும், மதுரை அடியான்கள் செய்ய வேண்டிய பூசைகளின் விதத்தையும் விளக்கி எழுதப்பட்ட அஞ்சல் வடிவக் கட்டுரை அடுத்ததாக உள்ளது.
  6. பல்வேறு காரணங்களினால் குருதேவர் அவர்களே போர் நிகழ்த்தி தற்காப்பு பெற வேண்டிய நிலையினை விவரிக்கும் சிறிய கட்டுரை.
  7. தமிழர்களின் உலகளாவிய முதன்மை எப்படி? எவ்வாறு? என்பதை விளக்கும் வாசகங்கள் இறுதிப் பக்கத்தில் உள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் ப்டித்திட --->>>

இந்த வெளியீட்டினை PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்.>>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |