இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2017 வெளியீடுகள் > அன்புச் சேவுக! - 1
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

அன்புச் சேவுக! - 1

வைகாசி மாதம் (May - 2017)

அன்புச் சேவுக!

  குருதேவர், 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி, ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தமது தலைமைச் சீடர்களுக்கு எழுதிய அருளுரை, அறிவுரை, அறிவார்ந்த அருளுரை, அருளார்ந்த அறிவுரை அஞ்சல்கள் ஏராளம். அவற்றில் அன்புள்ள சேவுக! என்று தலைப்பிட்டு எழுதிய சில அஞ்சல்கள் இந்த வெளியீட்டில் உள்ளன.

  இன்றைய தமிழர் மத நிலைகளும், தமிழர் நாட்டு நிலைகளும், தமிழர் நாட்டு ஆட்சி நிலைகளும், .... இவற்றைச் சரி செய்வதற்காக இயக்கங்கள் நடத்தியும், தனி மனிதர்களைத் தயாரித்தும் செயல்படும் தன்னுடைய நிலைகளை விவரித்தும் குருதேவர் எழுதிய கட்டுரைகளே இவை.

முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும்....

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |