இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2019 வெளியீடுகள் > அ.வி.தி. குருவாணைகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

அ.வி.தி. குருவாணைகள்

அ.வி.தி. செயல்திருத்தக் குருவாணைகள்

 அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் செயல்திட்டங்கள் பல இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் துவக்கக் கால முதலே விரிவாகவும் விளக்கமாகவும் வழங்கப் பட்ட போதும், அவற்றின் செயல்நிலைகளில் மாற்றங்களும், தவறுகளும், குறைகளும், ... ஏற்படும் போது இந்து மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் 'செயல்திருத்தக் குருவாணைகளை' வழங்கி சரி செய்வார். அந்தச் செயல் மரபின் அடிப்படையில் குருதேவர் வழங்கிய சில செயல் திருத்தக் குருவாணைகளை இந்த இதழில் காணலாம்.

அவையாவன:

  1. அ.வி.தி. செயல்திருத்தக் குருவாணை
  2. இ.ம.இ. அரங்கின் மேல் அ.வி.தி.யின் வளர்ச்சி
  3. இந்துமத வழிப் புரட்சி
  4. செயல்நலம் பாராட்டு ஊக்க ஆக்கத் திருவோலை
  5. செயல்விளக்க அறிவிக்கை மடல்

என ஐந்து கட்டுரைகளின் நகல்களைப் படிக்கலாம். இறுதியாக பெரியார் ஈ.வெ.ரா. அவர்களை இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் கௌரவத் தலைவராக ஏற்றது குறித்து இ.ம.இ.யின் இரண்டாவது தலைவர் சித்தர் காகபுசுண்டர் ம.பழனிச்சாமிப் பிள்ளை வழங்கிய சில கருத்துக்கள் உள்ளன.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

இந்த இதழை PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்.--->>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |