இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2019 வெளியீடுகள் > பிறவிப் பெருங்கடல்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

பிறவிப் பெருங்கடல்

பிறவிப் பெருங்கடல் கடக்கும் தோணிப் பயணத் துவக்கம்

  இந்த இதழில் குருதேவர் ஞாலகுருவாக இருந்து தம்முடைய மாணாக்கர்கள் பலருக்கும் எழுதிய சிறிய சிறிய அஞ்சல்கள் சில உள்ளன. இவை சிறிய அஞ்சல்களாக இருந்தாலும் இவற்றில் மிகப் பெரிய தத்துவக் கருத்துக்களை இடையிடையே வழங்கியே குருதேவர் அஞ்சல்களை எழுதியிருக்கின்றார். குருபாரம்பரிய தத்துவக் கருத்து வாசகங்களை ஆங்காங்கே தமது அஞ்சல்களின் மூலம் வெளியிடுவதன் மூலம் குருதேவர் பாரம்பரிய இரகசியங்களாக இருந்தவை பலவற்றையும் போர்க்கால அடிப்படையில் வெளியிட்டுள்ளார் என்பதை இவற்றினைப் படிப்பதன் மூலம் அறியலாம்.

கீழ்க்காணும் அஞ்சல்கள் இந்த இதழில் உள்ளன:

  1. "பிறவிப் பெருங்கடல் கடக்கும் தோணிப் பயணத் துவக்க அறிவிப்பு அழைப்புத் திருமடல்."
  2. "திருவருட் பணியில் பங்கு பெற விடுக்கும் திருவோலை."
  3. "திருச்சி மாவட்ட அருளாட்சிப் பணி அழைப்புத் திருவோலை."
  4. "செயல்விளக்க ஊக்க அறிவுரை ஆணை."
  5. "செயல்நலம் பாராட்டு மடல்."
  6. "வளவளர்ச்சி வழிகளைச் சிந்தித்து உருவாக்க வேண்டும் திருவோலை."
  7. "அருளுலக இளவரசுகள் அறிவிப்புப் பயண வெற்றி நன்றி மடல்."
  8. "அருளாட்சிக்கான தீரத் தியாகத் திட்ட விளக்க மடல்."

இறுதியாக குருதேவர் அவர்களின் எழுத்தல்லாத, ஆனால் 64வது நாயனாராகிய சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தமது இயக்கத்தின் திருவண்ணாமலை மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையின் ஒரு பகுதி இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

முழுமையாக PDFவடிவில் படித்திட இங்கே தொடரவும்>>>

 

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |