இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2022 வெளியீடுகள் > அருட்போருக்கு ஆயத்தமாகுங்கள்!
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

அருட்போருக்கு ஆயத்தமாகுங்கள்!

 அருட்போருக்கு ஆயத்தமாகுங்கள்

(1) அருட்போர் என்பது இந்துமதத்தில் ஏற்பட்டு விட்ட மடமைகளையும், கற்பனைகளையும், இந்துமத துரோக விரோதப் போக்குகளையும், ... ... முழுமையாக அகற்றுவதற்காக இந்துக்களிடையே நிகழப்போகின்ற கருத்துப் போர் என்ற விளக்கத்திற்கு ஏற்ப குருதேவர் தமது மாணாக்கர்களை அருட்போருக்கு எப்படியெப்படி எல்லாம் ஆயத்தமாக வேண்டும் என்பதை விவரித்து எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை முதலாவதாக உள்ளது.

(2) குருதேவர் நிகழ்த்திய திருவரங்கப் பயிற்சிமுகாமிற்கு வந்து பயிற்சி எடுத்துக் கொன்ட பாளையங்கோட்டைச் சித்தரடியானுக்கு குருதேவர் விடுத்த பாராட்டு மடல். இதிலேயே குருதேவர் தமது அடியான்கள் சிவப்புடை உடுத்தி குருதேவரின் பதிலிகளாகச் செயல்பட ஒப்புதல் வழங்கி அறிவுரைகளும் வழங்கிடும் சுருக்க விளக்க அஞ்சல் அடுத்ததாக உள்ளது.

(3) குருதேவரின் அருளுலகச் சமத்துவ உணர்வினை விளக்கி மதுரையில் புதிதாகத் தயாராகி வரும்  சித்தரடியானுக்கு தலைமைப்பீடத்திலிருந்து எழுதப்பட்ட விளக்க அஞ்சல் மூன்றாவதாக உள்ளது.

(4) குருவாசகத்தில் கடவுள்களைப் பற்றிய விளக்கமும், அவர்களை வழிபடும் விதத்தில் உள்ள பகுத்தறிவுத் தன்மையையும் விளக்கிடும் வாசகம் நான்காவதாக உள்ளது.

(5) இறுதிப் பக்கத்தில் இருக்கு வேதத்தில் உள்ள செய்திகளைப் பற்றிய ஒரு மின்னல் வீச்சுப் போன்ற கருத்துரை உள்ளது.

இந்த வெளியீட்டினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் >>>
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |