பண்பாட்டுப் புரட்சி
இ.ம.இ.யும், இ.மு.க.வுமே முழுமையான பண்பாட்டுப் புரட்சியை மலரச் செய்யும்.
- கும்பகோணம் தாராசுரத்தைச் சேர்ந்த அறிமுகத்தாருக்கு குருதேவர் விடுத்த மடல் முதலாவதாக உள்ளது. இதில் நஆயிரக்கணக்கான குடும்பத்தவர்கள் மந்திரவாதிப் பாதிப்புக்களுக்கு உள்ளாகி அதைச் சரி செய்து கொள்ள முடியாமல் தவிப்பதைப் பற்றியும், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் மூலம்தான் எளிய முறையில் குறைந்த செலவில் பரிகாரங்களைச் செய்து கொள்ள முடியும் என்பது பற்றியும் விளக்குகின்றார் குருதேவர்.
- அடுத்ததாக இந்து முன்னேற்றக் கழகம் ஒரு சமுதாயச் சீர்திருத்தக் கழகம் என்பதனை விளக்கி கும்பகோணம் பாபநாசத்தைச் சேர்ந்த மாணாக்கருக்கு குருதேவர் விளக்கிய செயல்திட்டங்கள் அடங்கிய மடல் உள்ளது.
- மூன்றாவதாக தமிழர்களின் இலக்கியச் சொத்துக்கள் எப்படி பாதுகாக்கப்படாமல் அழிய விடப்படுகின்றன என்பதை சுருக்கமாக விளக்கி பகுத்தறிவுப் பாரம்பரியத்தினர் ஒருவரின் வாரிசுக்கு குருதேவர் விளக்கி எழுதிய மடல் உள்ளது.
- நான்காவதாக ஆந்திர மாநிலத்தில் உள்ள தெலுங்கு மொழி பேசும் அடியானுக்கு குருதேவர் ஆங்கிலத்தில் எழுதிய மடல் அப்படியே தரப்பட்டுள்ளது.
- ஐந்தாவதாக சித்தர்நெறியாளர்கள் அனைவரும் பொதுமேடைகளிலும், அன்றாட வாழ்விலும் பயன்படுத்த வேண்டிய நான்வேத வாசகங்கள் உள்ளன. இவற்றை தமிழராகப் பிறந்த அனைவரும் பயன்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
- இந்து முன்னேற்றக் கழகத்தின் அறிவிக்கை எண்:3333 அடுத்ததாக உள்ளது.
- இறுதிப் பக்கத்தில் பயிற்சி முகாமின் போது குருதேவர் வழங்கிய சில குறிப்புக்கள் உள்ளன.
இந்த இதழினை முழுமையாக படித்திட இங்கே தொடரவும் ====>>>>
Last edited: June 14, 2024, 13:14