தமிழர்களை ஒற்றுமைப்படுத்துதல்

மாசி மாதம், 43,73,125ஆம் ஆண்டு.

"தமிழர்களைப் பதினெண்சித்தர்களுடைய சாத்திறங்களால்தான் ஒன்றுபடுத்த முடியும்!"

 

1. கும்பகோணம் மாசி மகத் திருவிழாவின் போது அங்கே அருட்பணி ஆற்றிய பின் குருதேவர் எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை இந்த இதழின் முதல் கட்டுரையாக உள்ளது. குருதேவரின் மாணாக்கர்கள் ஒவ்வொருவரும் ஆற்றல் மிக்க தலைவராகத் தயாராக வேண்டும் என்று கருத்து விளக்கங்கள் வழங்கி எழுதப்பட்ட கட்டுரை இது.

2. கும்பகோணம் தாராசுரத்தில் குருதேவர் அருட்பணியாற்றிய போது துணை நின்ற மாணாக்கருக்கு எழுதிய இந்த கடிதத்தில் குருதேவர் அவர்கள் இந்த நாட்டில் உள்ள அமைப்புக்கள் போட்டாபோட்டியிலும், சண்டை சச்சரவுகளிலும் காலம் கடத்தி தங்களுடைய முதன்மையான நோக்கங்களைத் தவற விட்டு விடுகிறார்கள் என்பதை விளக்கி; அதன் மூலம் நமது நாட்டின் அமைப்புக்ள், கழகங்கள், இயக்கங்கள், கட்சிகள் அனைத்தையும் பற்றி மறுசிந்தனை செய்ய வேண்டியதின் அவசியத்தினை வலியுறுத்துகிறார்.

3. மெய்யான தமிழ் உணர்வுடன் தம்மைத் தொடர்பு கொண்ட ஆர்வலர் ஒருவருக்கு குருதேவர் எழுதிய கடிதத்தில் பட்டிதொட்டி, குக்கிராமங்கள், சிற்றூர்கள், பேரூர்கள் எங்கணும் தமிழனை எழுச்சி பெறச் செய்வதற்கும், பயிற்சி செய்து உயர்ச்சி பெறுவதற்கும் அழைப்பு விடுக்கும் பணியில் ஈடுபட வருமாறு அவரை அழைத்து விளக்கங்கள் வழங்குகிறார்.

4. அடுத்ததாக உள்ள கடிதத்தில் இராமகிருட்டிண ஞானயோகத் தபோவனம் அமைத்துச் செயல்படும் துறவிகளுக்கு கடவுள்களின் வகைகளைப் பற்றிய விளக்கங்களைத் தந்து சுருக்கமாக குருதேவர் எழுதியுள்ளார்.

5. இறுதிப் பக்கத்தில் கடல் போன்ற இந்துவேதம் பற்றியும், அதிலிருந்து எடுக்கப்பட்ட உப்புப் போன்ற இந்துமதம் பற்றியும் குருதேவர் தமது அருளுரையில் வழங்கிய கருத்து உள்ளது.

 

இந்த இதழினை முழுமையாகப் படிக்க இங்கே தொடரவும்->>>