குருவாணையுணர்தல்

குருவாணை உணர்தலும் உணர்த்தலும்

 

  1984இல் குருதேவர் குருவாணை என்றால் என்ன என்பது பற்றி வழங்கிய ஒரு விளக்கக் கட்டுரை முதலில் உள்ளது. இந்தக் கட்டுரையில், பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்கே உரிய 'குருதேவர்' என்ற நிலை பற்றியும், குருதேவராக இருந்து அவர்கள் வழங்கும் குருவாணைகள் பற்றியும் அனைவருக்கும் விளக்கங்கள் தரப்படுகின்றன. அருளுலகில் செயல்படுவதற்கு பதினெண்சித்தர் பீடாதிபதிகளிடம் பெற்றுள்ள குருவாணையே மிகச் சிறந்த பாதுகாப்பாக என்றும் நிலைத்து நிற்கும்.

 அடுத்ததாக, அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் செயல்படும் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் ஆகியோர் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை 'இரு திறத்தார் செயல் விளக்கத் திருவோலை'யாக குருதேவர் வழங்கும் கட்டுரை.

 இறுதியாக, குருதேவர் 1984இல் உலக அருளாளர்களால் 'இந்துமதத் தந்தை' என்று அருட்பட்டம் வழங்கப் பெற்ற செய்தியைத் தெரிவித்து வழங்கிய 'செயல்நலம் பாராட்டு ஊக்கத் திருவோலையும், ஐந்தாவது முப்பெருவிழா அறிவிப்பு ஆணையும்' என்ற அஞ்சல் கட்டுரை உள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட இங்கே தொடரவும்--->>>

முழுமையாக PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்---->>>>