இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2018 வெளியீடுகள் > முப்பெரு விழா
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

முப்பெரு விழா

அருளுலக முப்பெரு விழா

    அருளாட்சி அறிவிப்பு, அருளாட்சி அழைப்பு, அருளாட்சி அமைப்பு என்ற மூன்றும் சேர்ந்தே அருளுலக முப்பெரு விழாவின் திட்டங்களாகின்றன என்பதை விளக்கிய அறிவிக்கையும், குருநிலை விளக்கக் குறிப்பும் இந்த முதல் கட்டுரையில் உள்ளன.

   முப்பெருவிழாவின் போது தாமாகவே நிகழ்ந்த சித்து விளையாடல் பற்றிய சிறு குறிப்பு அடுத்ததாக உள்ளது.

    மருத்துவம் படித்துக் கொண்டிருந்த மாணாக்கனுக்கு வெற்றிகரமாக தேர்வினைச் சந்தித்திட வழங்கிய பூசைக் குறிப்பும், கருத்து விளக்கங்களும் அடுத்து உள்ள கட்டுரையில் உள்ளன. ஆனால், அவருக்கு வழங்கிய பூசை மந்திரங்கள் அந்தச் சூழ்நிலையில் அவருக்கு மட்டுமே வழங்கியவை என்பதால் வெளியிடப் படவில்லை.

   அடுத்ததாக இரண்டாம் முப்பெருவிழா நிகழ்வின் மூலம் பெறப்பட வேண்டிய எச்சரிக்கைகளை விளக்கி, மூன்றாம் முப்பெரு விழாச் செயல்நிலைகளுக்காக பாராட்டுகளும் வழங்கிய திருவோலை உள்ளது.

  இடையில் "இந்தியாவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே, இவர்களின் மதமே இந்துமதம்" என்பதனை விளக்கும் பகுதிகள் ஓர் அஞ்சலிலிருந்து எடுத்து வழங்கப் பட்டுள்ளன.

  அடுத்ததாக செயற்குழு மாநாடு அறிவிப்பு மடலில் வழங்கப் பட்ட கோள்வட்டச் செயல்திட்டங்களும், இராசிவட்டத் தீர்மானங்களும் உள்ளன.

  இறுதியாக வேம்பை அடியான்களுக்காக வழங்கிய 'பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சொல்லடி நாயனாராக' அறிவிக்கப் பட்டதற்கான காரண விளக்கங்களும், குருதேவரின் செயல் நிலை விளக்கங்களும் உள்ள அஞ்சல் வடிவக் கட்டுரை உள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்.....>>>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |