முப்பெரு விழாவின் முயற்சிப் பணிக் கருத்தோவியங்கள்
1983இல் குருதேவர் தமக்குக் கிடைத்திட்ட மாணாக்கர்களின் மூலம் அவர்கள் வாழும் வட்டாரங்களில் அருளாட்சிக்கான அறிவிப்பை அந்தந்த வட்டாரத்துக் கோயில்களில் வழங்கி; அதன் மூலம் மக்களுக்கு அருளாட்சி என்றால் என்ன என்பதைப் பற்றிய விளக்கங்களை வழங்கிடும் விழாவாக முப்பெரு விழாவைச் செயல்படுத்தினார். அதுபோன்ற முப்பெரு விழாக்களுக்கான முயற்சி எடுத்தவர்களுக்கு குருதேவர் வழங்கிய அறிவுரைகளை இந்த மாத வெளியீட்டில் காணலாம்.
முதலாவதாக அருள்மிகு வீரமாகாளி சன்னிதானம் திரு நெ.சேவுகன் அவர்கள் மதுரை அருள்தாசபுரத்தில் வாசித்தளித்த கொள்கை விளக்கம் உள்ளது.
இரண்டாவதாக, குருதேவர் அவர்கள் திரு நெ.சேவுகனுக்கு எழுதிய 'செயல் ஊக்க ஆக்க அழைப்பு' அஞ்சல் உள்ளது.
மூன்றாவதாக, 'முப்பெருவிழா பாராட்டுக்குப் பதில் மடலாக' குருதேவர் அவர்கள் விரகாலூர் சித்தரடியான் திரு நாகராசு அவர்களுக்கு எழுதிய அஞ்சல் உள்ளது.
இறுதியாக 'இரண்டாவது முப்பெரு விழா முயற்சிப் பணிக் கருத்தோவியங்கள்' எனும் தலைப்பில் குருதேவர் அவர்கள் வழங்கிய நெடிய கட்டுரை அஞ்சல் உள்ளது.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்...>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.