இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2018 வெளியீடுகள் > மடாதிபதிக் குழு
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

மடாதிபதிக் குழு

பதினெண்சித்தர் மடாதிபதிக் குழு

 அறிவிக்கை எண் 7777 என்று எண்ணிக்கையிட்டு வழங்கப்பட்ட 'பதினெண்சித்தர் மடாதிபதிக் குழு' பற்றிய விளக்கம் முதற்கண் உள்ளது. இந்த அறிவிக்கையில் பதினெட்டு அருட்பட்டத்தவர்கள் உருவாக்கப்பட்டு ஒரு பதினெண்சித்தர் மடாதிபதிக் குழு அறிவிக்கப் படுகின்றது என்ற கருத்தில் ஒவ்வொரு அருட்பட்டத்திற்கும் உரிய பொருள் விளக்கப் பட்டுள்ளது.

 இதன் அடிப்படையில் முந்தைய பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட மதுரை ஆதீனம் இன்றும் நின்று நிலவுகின்றது என்பதனைப் பார்த்தால் புரியும். பீடாதிபதியால் உருவாக்கப்படும் பதினெட்டு அருட்பட்டத்தவர்களில் பலரும் இலைமறை காய் நிலையை ஏற்று வாழ்ந்திடுவதால் ஓரிரண்டு அருட்பட்டத்தவர்கள் மட்டுமே உலகறியத் தெரிய வருகின்றனர்.

 அப்படி வாழ்ந்து வரும் மதுரை ஆதீன மடத்தில் வாழையடி வாழையாக வந்து இன்று பட்டமேற்றுச் செயல்பட்டு வரும் மதுரை ஆதீனத்திற்கு விடுத்த விளக்க மடல்கள் இந்த இதழிலேயே இடம் பெறுகின்றன.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

PDF வடிவில் படிப்பதற்கு இங்கே தொடரவும்...--->>>

 

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |