இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2018 வெளியீடுகள் > சித்தர்நெறி விளக்கம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

சித்தர்நெறி விளக்கம்

சித்தர் நெறி விளக்கம்

  மந்திற மாயங்களால் ஆனது அல்ல சித்தர் நெறி; மருத்துவங்களாலும் இரசவாதங்களாலும் மட்டுமே வலிமைப்பட்டது அல்ல சித்தர் நெறி; இந்தச் சித்தர் நெறியில் அடங்காத தத்துவங்களோ, வழிமுறைகளோ எதுவும் இல்லை - சித்தர்களின் தாய்மொழி தமிழ் மொழியே! சித்தர்கள் வழங்கியுள்ள அருட்செல்வங்கள் அனைத்தும் தமிழிலேயே உள்ளன. - இக்கருத்துக்களை விளக்கும் கட்டுரையே முதல் கட்டுரையாக இந்த மாத வெளியீட்டில் உள்ளது.

  அடுத்ததாக, ஆண்டு தோறும் வைகாசி மாதம் முழுநிலவு நாளன்று நிகழும் 'ஞானம் வழங்கும் பருவபூசை' விழாவிற்காக குருதேவர் வழங்கிய நெடிய தத்துவ விளக்கக் கட்டுரை உள்ளது. இதில் (1) காலடி ஆதிசங்கரர், (2) தந்தை பெரியார் ஈ.வெ.ரா., (3) மோகன்லால் கரம்சந்த் காந்தி, (4) கார்ல் மார்க்சு ஆகியோர் சித்தர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே தத்தம் காலக் கட்டத்தில் மதத்தைக் காப்பாற்றியும், மத விழிச்சியை உண்டாக்கியும், மத உணர்வுகளை அரசியல் உணர்வாக்கியும், மதத்திற்கும் மானுட வாழ்விற்கும் இடையே உள்ள உறவு முறைகளை விளக்கியும் செயல்பட்டிட்டனர் என்பதை அடிப்படையாகக் கொண்டே இந்து மறுமலர்ச்சி இயக்கம் இன்றைய காலக்கட்டத்தில் இயங்க வேண்டும் என்பதை விளக்குகின்றார் குருதேவர் அவர்கள்.

 இறுதியாக, அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் உறுதிமொழியாக அதன் நோக்கங்களை பட்டியலிட்டுத் தரும் அறிவிக்கை உள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும் >>>>

 

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |