இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2017 வெளியீடுகள் > மெய்யான இராமன் வரலாறு
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

மெய்யான இராமன் வரலாறு

பங்குனி மாதம் (March - 2017)

சித்தர் இராமாயணம் - IV
மெய்யான இராமன் வரலாறு.

  இராமாயணக் கதையை மீண்டும் முழுவதுமாக அளிப்பது அல்ல குருதேவர் அவர்களின் முயற்சி. மாறாக இன்று இருக்கும் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு வாழ்ந்து வரும் இராமாயணக் கதைக்கு மூலமாக, கருவாக உள்ள சித்தர் இராமாயணத்தை அறிமுகப் படுத்துவதுதான் இதன் நோக்கம்.

 அதன்படியே இந்த மாத இதழில் சித்தர் இராமாயணத்தினையும், நாட்டு வழக்கில் இருக்கும் இராமாயணத்தினையும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்த கட்டுரை உள்ளது. நிகழ்ந்தவற்றை அப்படியே வழங்கிடுவது சித்தர் இராமாயணம். ஆனால், பிற நாடுகளிலிருந்து இந்த நாட்டிற்குள் வந்து குடியேறி இந்த நாட்டவர்களாக மாறிய பிறாமணர்களின் கற்பனைக்கு ஏற்ப மிகப் பெரிய திருத்தங்களைக் கொண்டதுதான் வடமொழியில் இருக்கும் 'வால்மீகி இராமாயணம்'.

  இதனை விளக்கும் வகையில் அமைந்த இந்த மாத இதழினை PDF கோப்பாக முழுமையாகப் படித்திட இங்கே செல்லவும்.

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |