அருட்போருக்கு ஆயத்தமாகுங்கள்!

 அருட்போருக்கு ஆயத்தமாகுங்கள்

(1) அருட்போர் என்பது இந்துமதத்தில் ஏற்பட்டு விட்ட மடமைகளையும், கற்பனைகளையும், இந்துமத துரோக விரோதப் போக்குகளையும், ... ... முழுமையாக அகற்றுவதற்காக இந்துக்களிடையே நிகழப்போகின்ற கருத்துப் போர் என்ற விளக்கத்திற்கு ஏற்ப குருதேவர் தமது மாணாக்கர்களை அருட்போருக்கு எப்படியெப்படி எல்லாம் ஆயத்தமாக வேண்டும் என்பதை விவரித்து எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை முதலாவதாக உள்ளது.

(2) குருதேவர் நிகழ்த்திய திருவரங்கப் பயிற்சிமுகாமிற்கு வந்து பயிற்சி எடுத்துக் கொன்ட பாளையங்கோட்டைச் சித்தரடியானுக்கு குருதேவர் விடுத்த பாராட்டு மடல். இதிலேயே குருதேவர் தமது அடியான்கள் சிவப்புடை உடுத்தி குருதேவரின் பதிலிகளாகச் செயல்பட ஒப்புதல் வழங்கி அறிவுரைகளும் வழங்கிடும் சுருக்க விளக்க அஞ்சல் அடுத்ததாக உள்ளது.

(3) குருதேவரின் அருளுலகச் சமத்துவ உணர்வினை விளக்கி மதுரையில் புதிதாகத் தயாராகி வரும்  சித்தரடியானுக்கு தலைமைப்பீடத்திலிருந்து எழுதப்பட்ட விளக்க அஞ்சல் மூன்றாவதாக உள்ளது.

(4) குருவாசகத்தில் கடவுள்களைப் பற்றிய விளக்கமும், அவர்களை வழிபடும் விதத்தில் உள்ள பகுத்தறிவுத் தன்மையையும் விளக்கிடும் வாசகம் நான்காவதாக உள்ளது.

(5) இறுதிப் பக்கத்தில் இருக்கு வேதத்தில் உள்ள செய்திகளைப் பற்றிய ஒரு மின்னல் வீச்சுப் போன்ற கருத்துரை உள்ளது.

இந்த வெளியீட்டினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் >>>