இந்தியாவில் அருளாட்சி

இந்துமதத்துக்குரிய இந்தியாவில் அருளாட்சி அமைய வேண்டும்

 இந்த இதழில் 1986இல் குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தமது மாணாக்கர்களுக்கு எழுதிய செயல்நிலை விளக்கத் திட்டங்கள் உடைய அஞ்சல்களின் நகல்கள் உள்ளன.

 முதல் கட்டுரையில் இந்தியாவே இந்துமதத்திற்குரியது; இந்த இந்தியாவில் இந்துமதத்தின் அருளாட்சியை அமைக்க வேண்டும் என்று விளக்கங்கள் தந்து அருள்மிகு வீரமாகாளி சன்னிதானத்திற்கு எழுதிய அஞ்சல் உள்ளது.

 இரண்டாவதாக, இயக்கம் என்பது தொடர்ந்து சேருபவர்கள் மட்டும் உள்ளதல்ல; சேருபவர்களும் அதைப் போலவே விலகுகிறவர்களும் இருப்பதுதான் இயக்கம் என்ற அரிய விளக்கம் தந்து எழுதப்பட்ட அஞ்சல் உள்ளது.

 மூன்றாவதாக, நமது அடியான்கள் அனைவரும் அறிவுப் பூர்வமாக நடுநிலையில் நின்று எதையும் விமரிசிக்கத் தயங்கவே கூடாது என்று அறிவுரை வழங்கி குருதேவர் எழுதிய அஞ்சல் உள்ளது.

 நான்காவதாக, காரணோடையில் கருகுலம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டன என்பதை விளக்கிய செய்தி உள்ள அஞ்சல் அமைந்துள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

PDF வடிவில் முழுமையாகப் படிக்க இங்கே தொடரவும்....>>>