இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2019 வெளியீடுகள் > மாபெரும் தத்துவ வாரிசு
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

மாபெரும் தத்துவ வாரிசு

இவ்வுலகின் முதல் மாபெரும் தத்துவ வாரிசுதான் நம் குருதேவர்.

  அடியானின் குருநிலை விளக்கமாக அன்றைய திருச்சி மாவட்ட அறிமுகத்தார் ஒருவருக்கு குருதேவர் கூறி எழுதப்பட்ட அஞ்சல் வடிவக் கட்டுரை முதலாக உள்ளது. இதன் மூலம் குருதேவர் சாதாரண சித்து விளையாடல் காரரோ, கூட்டத்தைச் சேர்த்து வர்த்தகமாக்கிச் செயல்படும் சாமியாரோ அல்ல; ஆனால், ஒரு மாபெரும் தத்துவத்தின் வாரிசாகவே செயல்படுகின்றார் என்பதனை புரிந்து கொள்ளலாம்.

 அடுத்ததாக, தாம் நடத்தும் இயக்கத்திற்கு பொருளுதவியை பெறுவதைக் கூட முன்பின் அறியாதவர்களிடம் நன்கொடையாகப் பெற்று விடாமல்; சித்தர் நெறித் தத்துவத்தை அறிந்து, புரிந்து, செயல்படுத்திட முன்வருபவர்களிடம் மட்டுமே கேட்டு, அவர்களால் வழங்க முடிந்ததை மட்டுமே ஏற்றுச் செயல்படுத்தும் முறையையே குருதேவர் பின்பற்றுகின்றார் என்பதனை விளக்கும் அஞ்சல்கள் இரண்டு உள்ளன.

 காரைக்குடி வட்டார அடியான்களுக்கு அருட்பணி விரிவாக்கத் திட்ட செயல்நிலை பற்றிய ஐய விளக்கங்களை வழங்கும் அஞ்சல் அடுத்து உள்ளது.

 ஏற்கனவே சித்தரடியான் நிலை விளக்கம் என்ற தலைப்பில் 4 கட்டுரைகள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக குருதேவர் எழுத விரும்பிய கட்டுரைக்கான குறிப்புக்கள் மட்டுமே உள்ள நகல் அடுத்ததாக இருக்கின்றது.

 இறுதியாக இந்து மறுமலர்ச்சி இயக்கத்தில் சேருங்கள் என்று அழைப்பு விடுக்கும் அறிவிக்கை உள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

முழுமையாக PDF வடிவி படித்திட இங்கே தொடரவும்>>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |