இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2019 வெளியீடுகள் > குருவாணையுணர்தல்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

குருவாணையுணர்தல்

குருவாணை உணர்தலும் உணர்த்தலும்

 

  1984இல் குருதேவர் குருவாணை என்றால் என்ன என்பது பற்றி வழங்கிய ஒரு விளக்கக் கட்டுரை முதலில் உள்ளது. இந்தக் கட்டுரையில், பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்கே உரிய 'குருதேவர்' என்ற நிலை பற்றியும், குருதேவராக இருந்து அவர்கள் வழங்கும் குருவாணைகள் பற்றியும் அனைவருக்கும் விளக்கங்கள் தரப்படுகின்றன. அருளுலகில் செயல்படுவதற்கு பதினெண்சித்தர் பீடாதிபதிகளிடம் பெற்றுள்ள குருவாணையே மிகச் சிறந்த பாதுகாப்பாக என்றும் நிலைத்து நிற்கும்.

 அடுத்ததாக, அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் செயல்படும் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் ஆகியோர் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை 'இரு திறத்தார் செயல் விளக்கத் திருவோலை'யாக குருதேவர் வழங்கும் கட்டுரை.

 இறுதியாக, குருதேவர் 1984இல் உலக அருளாளர்களால் 'இந்துமதத் தந்தை' என்று அருட்பட்டம் வழங்கப் பெற்ற செய்தியைத் தெரிவித்து வழங்கிய 'செயல்நலம் பாராட்டு ஊக்கத் திருவோலையும், ஐந்தாவது முப்பெருவிழா அறிவிப்பு ஆணையும்' என்ற அஞ்சல் கட்டுரை உள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட இங்கே தொடரவும்--->>>

முழுமையாக PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்---->>>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |