இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2019 வெளியீடுகள் > கருவூறார் கீதை
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

கருவூறார் கீதை

சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் கீதை

  இந்த தொகுப்பு நூலில் கீழ்க்காணும் தலைப்பிட்ட கையெழுத்துப் பிறதி நகல்கள் அடங்கி இருக்கின்றன. தமிழர்கள் அனைவரும் மட்டுமின்றி உலகத்தவர்கள் அனைவரும் படித்து சிந்திக்க வேண்டிய கருத்தாழம் குருதேவர் அவர்களின் எழுத்துக்களில் உள்ளன.

  1. பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் எழுதிய முதல் கீதை. இந்தக் கட்டுரை 12/03/1985இல் குருதேவர் அவர்களால் வெளியிடப் பட்டது.
  2. கருவாக்கு, குருவாக்கு, தருவாக்கு, திருவாக்கு, அருள்வாக்கு, மருள்வாக்கு, கருவாசகம் முதலியவற்றின் குருபாரம்பரிய வாசகம் - 01/01/1985இல் குருதேவர் அவர்களால் அருளப்பட்ட கட்டுரை.
  3. 05/04/1984இல் குருதேவர் அவர்களால் மதுரைச் சித்தரடியான் திரு வேம்படியான் மணி அவர்களுக்கு எழுதப்பட்ட அஞ்சலில் தமது அடியான்கள் மந்திறவாதிகளின் தீய பாதிப்புக்களை வெல்லும் வழி கூறிய அஞ்சல்.
  4. 22/03/1985இல் வட ஆற்காடு மாவட்டச் சுற்றுப் பயணத்திற்காக குருதேவர் அவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரை.
  5. 27/03/1985இல் மதுரைச் சித்தரடியான் திரு ம.சி.இராமன் அவர்களுக்கு எழுதிய 'தமிழின ஒற்றுமைச் செயல்சித்தாந்தம்' என்ற தலைப்பில் உள்ள அஞ்சல்.
  6. இறுதியாக காரைக்குடிச் சித்தரடியான் மு.இராமானுசதாசு அவர்களின் ஐயங்களுக்கு விளக்கமாக அளித்த நெடிய அஞ்சல் வடிவக் கட்டுரை. இதில் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தம்மிடம் வரும் அடியான் அடியாள் அடியார்களை எதற்காக, எப்படி தயாரிக்க வேண்டும் என்ற விளக்கங்களை வழங்கி உள்ளார். உலகெங்கும் உள்ள மத குருமார்களை விட பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்குத்தான் அதிகமான பொறுப்பும், கடமைகளும் இந்த மண்ணுலகில் உள்ளன என்பதை இந்த அஞ்சல் விரிவாக விளக்குகின்றது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட இங்கே தொடரவும்--->>>

PDF வடிவில் படித்து பயன் பெற்றிட இங்கே தொடரவும்>>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |