இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2019 வெளியீடுகள் > இந்துமதம் தமிழருடையதே!
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இந்துமதம் தமிழருடையதே!

இந்து என்ற சொல்லும் இந்துமதம் எனும் வாழ்வியல் முறையும் தமிழருடையவே!

1. குருதேவர் தமது பதினெண்சித்தர் பீடாதிபதி நிலையில் இருந்தபடி எண்ணற்ற அறிவிக்கைகளை பொதுமக்களுக்காக வெளியிட்டே செயல்பட்டார். பிற மடாதிபதிகள், பீடாதிபதிகள் போல் தன்னளவில் வாழ்ந்துவிட்டுப் போக விரும்பவில்லை குருதேவர் அவர்கள். அப்படி வெளியிட்ட அறிவிக்கைகளுள் ஒன்றே "அருளாட்சி அமைப்பு எழிச்சி நிலை அறிவிப்பு" எனும் அறிவிக்கை. இந்த அறிவிக்கையும், இதன் தொடர்பாக எழுதப்பட்ட விளக்கங்களும் இந்த வெளியீட்டின் முதல் கட்டுரையாக உள்ளது.

இந்த வெளியீட்டில் உள்ள பிற கட்டுரைகள்:

2. புதிய அறிமுகத்தாருக்கு விளக்கம் தரும் விதமாக எழுதப்பட்ட கருத்து விளக்க அஞ்சல் "இந்து என்ற சொல்லும், இந்துமதம் எனும் வாழ்வியல் முறையும் தமிழருடையவே!"

3. இயக்கத்தின் செயல்நிலைகளை விவரித்து தமது மாணாக்கருக்கு எழுதிய திருவோலை.

4. அடியான்களின் செயல்நிலைகளில் திருத்தம் வழங்கும் விதமாக எழுதப்பட்ட தனிமனித விமரிசனச் செயல்திட்ட முடங்கல்.

5. குருதேவர் தமது தலைமை மாணாக்கருக்கு கொடுத்த அறிவுரை அஞ்சல்: "அருள்நிலையோடு அறிவு விழித்த நிலையில் செயல்பட வேண்டும்"

6. "செயல்நிலை மேம்பாட்டுப் பரிந்துரைகள்" என்ற தலைப்பில் குருதேவர் வழங்கிய பரிந்துரைகள்.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

கட்டுரைகளை PDF வடிவில் படிக்க ...--->>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |