இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2017 வெளியீடுகள் > கனவும் நனவும்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

கனவும் நனவும்

கார்த்திகை மாதம் (November 2017)

கனவும் நனவும்

 குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் எண்ணற்ற மாணாக்கர்களைத் தயாரித்தார். அவர்கள் சித்தரடியான்களாக, சித்தரடியாள்களாக, சித்தரடியார்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரின் அருள் அநுபவங்களை அவரே ஓர் அஞ்சல் வடிவக் கட்டுரை மூலம் விளக்கியுள்ள கட்டுரை இந்த இதழில் முதன்மை பெறுகின்றது.

 அடுத்ததாக குருதேவர் அவர்கள் புதிய மாணாக்கர்களுக்கு வழங்கிய சுருக்கமான அறிவுரை 'நனவு' என்ற பெயரில் இருக்கின்றது.

 மூன்றாவதாக இந்து மதத்தின் விளக்கமாக குருதேவர் வழங்கிய சிறிய கட்டுரை உள்ளது.

படித்து மகிழவும்! PDF கோப்பாகப் படிக்கலாம்.

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |